Posts

Showing posts from May, 2023

அழகிய மணவாளன்

                   நான் என் அமர்விற்கு பயன்படுத்தும் புகைப்படங்களை  ஒரு  வலைப்பூவில் பதிவிட்டிருக்கிறேன்.  அதன் இணைப்பு:  https:// kathakalireference.blogspot. com/?m=1 அன்புடன் மணவாளன்.

விக்னேஷ் ஹரிஹரன்

கவிதை [“லானா டர்னர் வீழ்ந்துவிட்டார்!”] ஃப்ராங்க் ஓ ஹாரா லானா டர்னர் வீழ்ந்துவிட்டார்! அன்று நான் விரைந்து கொண்டிருக்கையில் திடீரென  பனியும் மழையும் பொழியத் தொடங்கின  நீ அதை ஆலங்கட்டி மழை என்றாய் ஆனால் ஆலங்கட்டி மழை தலையில் அறையும்   பொழிவது பனியும் மழையும்தான்  அன்று உன்னை காணும் ஆவலில்  நான் விரைகையில்  போக்குவரத்து நெரிசலும்  வானத்தைப் போலவே நடந்துகொண்டது சட்டெனப் பார்த்தேன் அந்த தலைப்புச் செய்தியை லானா டர்னர் வீழ்ந்துவிட்டார்! ஹாலிவுட்டில் பனி கிடையாது கலிஃபோர்னியாவில் மழையுமே கிடையாது நானும் எத்தனையோ விருந்துகளுக்குச் சென்றிருக்கிறேன் மிக மோசமாக நடந்தும் இருக்கிறேன் ஆனால் வாஸ்தவத்தில் ஒரு நாளும் வீழ்ந்தது கிடையாது  ஓ லானா டர்னர்  நாங்கள் உன்னை காதலிக்கிறோம் எழுந்திரு ஒஸிமாண்டியாஸ் பெர்சி பைஷீ ஷெல்லி தொல்நில யாத்ரீகன் ஒருவனை சந்தித்தேன்  அவன் சொன்னான் "உடலற்ற இரு பெரும் கற்கால்கள்  நிற்கின்றன பாலைவனத்தில்.  அவற்றினருகே  அலட்சியச் சுளிப்பும் சுருக்கம் கண்ட உதடுகளும்  அதிகாரப் புன்முறுவலும் பூத்த  சிதைந்த முகம் ஒன்று புதையுண்டு கிடக்கிறது மணலில்.  உயிரற்ற கல்லில் உறைந்திருக்கும்

அருள்

  காலம் -- புழுதி எங்கிலும் புழுதி வாழ்க்கையின் தடங்களை வாங்கியும் அழித்தும் வடிவு மாற்றியும் நேற்று நேற்றென நெரியும் புழுதி தூரத்துப் பனிமலையும் நெருங்கியபின் சுடுகல்லாகும் கடந்தாலோ ரத்தம் சவமாகிக் கரைந்த செம்புழுதி புழுதி அள்ளித் தூற்றினேன் கண்ணில் விழுந்து உறுத்தின நிமிஷம் நாறும் நாள்கள் - அபி ______________________________ ___________ காலம் -- வாசனை சுத்தமாய் ஒருநாளை ஒதுக்கி நிறுத்திவைப்போம் எதற்கென்றுமில்லாமல் அது பரபரப்பதும் பரிதவிப்பதும் பார்த்திருப்போம் ஜரிகையில் எழுதிய தன்பெயர் அழிய அழிய அது பொருமிப் பெருமூச்சு விடக்கூடும் தன் நீள்சதுர உருவம் மங்கமங்க நழுவப் பெரிதும் துடிக்கலாம் வானம் தொட்டு நிமிர்ந்தும் மண்ணில் குறுகி நெளிந்தும் தன் மின் சக்தியால் எங்கும் துழாவக்கூடும் ஒதுங்கி நிற்போம் தன்னுள் செறிந்து பறக்கும் துகள்களுள் பதுங்கி மறைந்துள்ள சப்தங்களை வருடிச் சரி பார்க்கலாம் உலகின் முழுச்சாயையும் தேமல்போல் படர்ந்து தினவு தருவதை உணர்ந்தோ உணராமலோ தன்னைத் தேய்த்துவிட்டுக் கொள்ளலாம் சிரித்துக் கண்ணீர் சிந்தித் திமிறி தப்ப முடியாதெனக் கண்டு கடைசியில் அது வாய்திறந்து பேசி, பேச்சின

சுனீல் கிருஷ்ணன்

https://www.valaitamil.com/ pirakk-oru-iravu_9261.html https://archive.org/details/ orr-7081_Kizhavanin-Varugai-G- Nagarajan/mode/2up தேவிபாரதியின் பிறகொரு இரவு ஜி நாகராஜனின் கிழவனின் வருகை 

பார்கவி

https://www.newyorker.com/ magazine/1978/05/22/the-moons- of-jupiter  - அலிஸ் மன்றோ

வெள்ளிமலை காவிய முகாம் – 2023 -வைணவ பக்தி இலக்கியம் 1 ஜா.ராஜகோபாலன்

பெரியாழ்வார் பாடல்கள்  உறியை முற்றத்து*  உருட்டி நின்று ஆடுவார்*  நறுநெய் பால் தயிர்*  நன்றாகத் தூவுவார்* செறி மென் கூந்தல்*  அவிழத் திளைத்து*  எங்கும்  அறிவு அழிந்தனர்*  ஆய்ப்பாடி ஆயரே  விளக்கம் - பால் தயிர் நெய் முதலானவை வைத்திருந்த உறிகளை எடுத்து வந்து கண்ணனின் திருமாளிகை முற்றத்தில் உருட்டி உருட்டி தங்கள் மனம் போன படி ஆடுகின்றார்கள் சிலர். நறுமணம் மிக்க நெய் , பால் , தயிர் மூன்றையும் எல்லா இடங்களிலும் தூவுகின்றார்கள் சிலர். நெருக்கமாக வளர்ந்து மென்மையாக இருக்கும் கூந்தல் அவிழ்ந்ததும் தெரியாமல் மனம் ஆழ்ந்து திளைத்து ஆடுகின்றார்கள் சிலர். இப்படி நல்லது கெட்டது பிரித்தறியும் அறிவினை கண்ணன் பிறந்த மகிழ்ச்சியில் இழந்து திருவாய்ப்பாடி முழுவதும் ஆடிக் கொண்டிருக்கிறார்கள் இந்த ஆயர்கள் . 2. கிடக்கில் தொட்டில்*  கிழிய உதைத்திடும்*  எடுத்துக் கொள்ளில்*  மருங்கை இறுத்திடும்* ஒடுக்கிப் புல்கில்*  உதரத்தே பாய்ந்திடும்*  மிடுக்கு இலாமையால்*  நான் மெலிந்தேன் நங்காய். விளக்கம்- ' கண்ணனைத் தொட்டிலில் உறங்குவதற்காக இட்டால் அந்தத் தொட்டில் கிழிந்து போகும்படி உதைக்கிறான். கையில் எடுத்துக் கொண்டாலோ

விவிலியம் வாசிப்பு- சிறில் அலெக்ஸ்

‘விவிலியம் ஒரு நூல் அல்ல ஒரு நூலகம்’ என்பது ஒரு கூற்று. பல்வேறூ வகையான நூல்களின் தொகுப்பு அது. கத்தோலிக்க விவிலியத்தில் மொத்தம் 73 புத்தகங்கள் உள்ளன. யூத விவிலியத்தில் 24 புத்தகங்கள் உள்ளன. பிற கிறித்துவ சபைகள் சில புத்தகங்களை நீட்டியும், பிரித்தும், நீக்கியும் வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. இரு பெரும் பிரிவுகளாக விவிலியம் பிரிக்கப்பட்டுள்ளது 1. பழைய ஏற்பாடு 2. புதிய ஏற்பாடு. பழைய ஏற்பாடு மைய கருத்துக்கள் ஒரே கடவுள் - மிக முக்கியமான வேறுபாடு கடவுள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் வழியாக மக்களுடன் உறவாடினார் (தலைவர்கள், நீதிமான்கள், அரசர்கள், தூதுவர்கள், சாமனியர்கள்) யூதக் இனக்குழு வரலாறு கடவுளை நம்பும்போது நன்மையும், விலகும்போது தீமையும் வந்து சேரும் மெசியா குறித்த தீர்க்கதரிசனங்கள் பழைய ஏற்பாட்டின் பிரிவுகள் (46) மோசேயின் புத்தகங்கள் (அ) தோரா (அ) Pentateuch (5) தொடக்கநூல் - (ஆதியாகமம்) - படைப்பு, ஆதாம் ஏவாள், காயின் ஆபேல், நோவா, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, 12 புதல்வர்கள், யோசேப்பு, எகிப்துக்குச் செல்லுதல் விடுதலைப் பயணம் - (யாத்திராகமம்) - எகிப்தில் அடிமைகளாதல், மோசெ(மோயீசன், Moses), எகிப்தின