Posts

Showing posts from February, 2023
அடர்த்தியான காட்டின் காட்சி .   ஒரு யானை   மலைச்   சரிவில்   புதர்களுக்குள்   நின்று கொண்டிருக்கிறது .   யானை புதர்களுக்குள் நிற்கும்   காட்சி   எப்போதுமே   விந்தையானது .   ஓரளவுக்கு அருகில் சென்றால் கூட   நம்மால் சட்டென்று யானையை பார்க்க முடியாது . யானை பெரியது என்பதனால் பல பகுதிகளாகவே யானை தெரியும் .   ஒட்டுமொத்தமாக அது யானை என்று தெரிவதற்கு சில நிமிடங்கள் ஆகும் .   அந்த காட்சி விந்தையை   தொடக்கமாக பயன்படுத்தலாம் .   ஒரு தந்தம் மட்டும் தெரிகிறது . காட்டுயானையின் தந்தம் வெள்ளையாக இருக்காது , மரநிறத்தில் தான் இருக்கும் . முதலில் மரக்கிளை என தோன்றி , சட்டென்று அது யானையின் தந்தம் என்று கொஞ்சம் கழிந்து துலக்கம் பெறுகிறது .   அதன் பிறகு இன்னொரு தந்தம்   முழுமையாக தெரிகிறது . இலை அசைவுடன் இணைந்து யானையின் காது அசைவது தெரிகிறது .   ஒரு யானை அவ்வாறு   கொஞ்சம் கொஞ்சமாக   முழு வடிவம் பெற்று காட்சிகள் வரும்போது படம் தொடங்குகிறது ...